Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
குறைந்த பட்ஜெட்டில் மிகக் குறைந்த நாட்களில் தல...தளபதி படங்கள்.... நிஜம்தானா?
சென்னை: தல அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வையும், தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கும் படமும் இருவர் ரசிகர்களின் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படங்கள் குறித்து தினம் ஏதாவது ஒரு செய்தி கசியாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் கூகுள் சர்ச் செய்து வருவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இந்த இரு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்கள் ஷூட்டிங் என்று படு சிக்கனத்தில் எடுக்கப்பட்டு வருகிறதாம். ஆனால், சூப்பர் படப்பிடிப்பில் உருவாகி வருகிறது என்று சொல்கிறார்கள்.
பெரிய நடிகர்களை வைத்து அவர்களுக்கான சம்பளத் தொகையையும் அதிகமாக கொடுத்து, செலவும் அதிகமாக செய்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என்று இப்போது அதிகமாக பேசப்படும் நிலையில் இந்த ஃபார்முலா உருவாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுக்கும் தயாரிபாளர்கள் முதற்கொண்டு இந்த குறைந்த செலவு,குறைந்த நாட்கள்படப்பிடிப்பு என்கிற ஃபார்முலாவைத்தான் இப்போது கடைப்பிடித்து வருகிறார்களாம்.
அதோடு இப்படி எடுக்கப்படும் படத்தின் கதை ரொம்ப ஆழம் மிக்கதா இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.
இப்படி முன்னணி நடிகர்கள் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் நடிக்க ஒத்துழைப்பு தருவது மிக ஆரோக்கியமான விஷயம் என்றும்..இது தொடர்ந்தால் இனி தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேராது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் மிகவும் மகிழ்ச்சியாகப் பேசப்படுகிறது.