தமிழக-கர்நாடக எல்லையில் அஜீத்தை பரிசோதித்த டிராபிக் போலீஸ்
சென்னை: அஜீத் குமார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றபோது தமிழக-கர்நாடக எல்லையில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
அஜீத் குமார் தான் புதிதாக வாங்கிய பிஎம்டபுள்யூ பைக்கில் கடந்த வாரம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். ரேஸ் சூட்டில் சென்னையில் இருந்து கிளம்பிய அவர் ரோட்டோரக் கடை ஒன்றில் வண்டியை நிறுத்திவிட்டு சாப்பிட்டார்.

ரோட்டோரக் கடையில் அஜீத்தை பார்த்துவிட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அதன் பிறகு அவர் பெங்களூர் சென்றார். தமிழக-கர்நாடக எல்லையில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அஜீத்தின் பைக்கை நிறுத்தி உரிய ஆவணங்களை கேட்டனர். ஹெல்மெட்டை கழற்றியதும் பைக்கில் இருந்தவர் அஜீத் என்பதை பார்த்து போலீசார் ஆச்சரியப்பட்டனர்.
பின்னர் அஜீத் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


Click it and Unblock the Notifications











