Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நோ மீன்ஸ் நோ.. என்கவுன்டர் செய்த தெலுங்கானா போலீஸ்க்கு போஸ்டர் ஒட்டி வாழ்த்து சொன்ன அஜித் ஃபேன்ஸ்!
சென்னை: பெண் மருத்துவர் கொலை வழக்கு குற்றவாளிகளை என்கவுன்டரில் போட்டுதள்ளிய தெலுங்கானா போலீசாருக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானாவில் கடந்த 27ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். எரிக்கப்பட்ட நிலையில் கரிக்கட்டையாக அவரது உடல் 28ஆம் தேதி ஷம்சாபாத் பாலத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் லாரி ஓட்டுநர், கிளினர் என 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்று உடலை எரித்ததை ஒப்புக்கொண்டனர்.
நாடாளுமன்றம்
அவர்கள் நான்கு பேரையும் பொதுமக்கள் முன்னிலையில் கொல்ல வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
என்கவுன்டர்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் குற்றவாளிகள் 4 பேரும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது.
போஸ்டர்
திரைத்துறையை சேர்ந்த பலரும் என்கவுன்டரில் 4 பேரும் கொல்லப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே போயி போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
|
அஜித் ரசிகர்கள்
என்கவுன்டர் செய்த சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் நோ மீன்ஸ் நோ என ஆணையர் சஜ்னாரின் போட்டோவை போட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.