Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சும்மா ஜில்லுனு இருக்கார்ல.. ரசிகர்களுடன் தல அஜித்.. மீண்டும் வைரலாகும் புதிய போட்டோஸ்!
சென்னை: நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார் அஜித். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது.
காயம் அடைந்தார்
அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார். இதனால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டது.
காசி விஸ்வநாதர்
வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை, டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்கப்பட இருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், பின்னர் வரலாற்றுப் புகழ் மிக்க நகரமான சாரநாத்துக்கும் சென்றுள்ளார்.
தெருக் கடை
வாரணாசியில் அவர் தெருக் கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. மாஸ்க்கை கழற்றிய பிறகு அவர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபம் கேசரி என்பவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சிக்கிம் வரை
அப்போது அஜித்தை சந்தித்தது பற்றி அவர் பேட்டி அளித்திருந்தார். நடிகர் அஜித், சிக்கிம் வரை பைக்கிலேயே சென்றுவிட்டு சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் ரோட் ட்ரிப்பை முடித்திருந்தார். இந்த ட்ரிப்பில் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவரும் அஜித்துடன் சென்றிருந்தார்.
புதிய போட்டோஸ்
அவர் அஜித் பற்றி பாராட்டி சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருந்தார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இப்போது ரசிகர்களுடன் எடுத்துள்ள புதிய போட்டோஸ் வேகமாக பரவி வருகின்றன. சில ரசிகர்கள், தல சும்மா ஜில்லுனு இருக்கார்ல என்று தெரிவித்துள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!