Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அஜித்துக்கு அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க... அப்படி நடந்து கொள்வார்னு எதிர்பார்க்கல எஸ் எஸ் ராஜமெளலி!
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது
அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
இந்த நிலையில் இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி அஜித்துக்கு அவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இப்படி நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை என பிரபல தொலைக்காட்சியில் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்
கொலைவெறியில் கீர்த்தி சுரேஷ்…மிரட்டும் சாணி காயிதம் ட்ரெயிலர்
அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்
சிறுத்தை சிவா கூட்டணியில் அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வந்த அஜித் குமார் அடுத்ததாக இணைந்தது இயக்குனர் ஹெச். வினோத் உடன். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என இரண்டு வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வினோத் முதல் முறையாக அஜித் உடன் இணைந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக வெளியானது. இதில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசப்பட்டு இருந்தது.
பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகள்
அஜித்- வினோத் கூட்டணியில் வெளியான முதல் படமே வெற்றிப் பெற்ற நிலையில் இரண்டாவதாக இணைந்த படம் வலிமை. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட வந்த வலிமை சமீபத்தில் வெளியாகியது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் உருவான இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பைக் ரேசிங் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. ஆனால் வலிமை ரசிகர்களை அந்த அளவிற்கு கவரவில்லை. பிரம்மாண்ட ஸ்டண்ட் காட்சிகள் எனது படத்தில் பாராட்டுகளைப் பெற்றது.
மீண்டும் வினோத் இயக்கத்தில்
வலிமை கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைத் தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியானது.
அறிமுகம் செய்துகொண்டார்
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமெளலி அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது ஒரு நாள் ஹோட்டலில் ராஜமெளலி தனது குடும்பத்துடன் சாப்பிட சென்றுள்ளார் அப்போது பக்கத்து டேபிளில் அஜித்குமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ராஜமௌலியை அழைத்து பேசியுள்ளார். அருகில் உட்கார்ந்தவர் ராஜமெளலியின் மனைவி என்று தெரிந்த பிறகு எழுந்து நின்று நான் அஜித் குமார் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
அப்படி நடந்து கொள்வார்னு எதிர்பார்க்கல
தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய நடிகர் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர் என்னுடைய குடும்பத்தாரிடம் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. மேலும் ரசிகர்களிடம் தன்னை தல என்று அழைக்க வேண்டாம் அஜித் குமார் அல்லது ஏகே என அழைத்தாலே போதுமானது எனக் கூறியது எனக்கு மேலும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு அஜித் மீதான மரியாதை பல மடங்கு கூடியது என எஸ்எஸ் ராஜமெளலி தனியார் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்