அஜீத்தை கவர்ந்த ஔவையின் ஆத்திச்சூடி

அஜீத் குமார் ஷூட்டிங்ஸ்பாட்டில் ஔவையாரின் ஆத்திச்சூடியை படிக்கிறாராம். படிப்பதோடுமட்டுமல்லாமல் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு தினமும் ஒரு ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கிறாராம்.
தினமும் காலையில் முதல் வேலையாக ஆத்திச்சூடியை எஸ்.எம்.எஸ். அனுப்புகிறாராம். அண்மையில் அவர் பெங்களூர் சென்றபோது அவரது நண்பர் ஒருவர் செல்போனில் ஆத்திச்சூடி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யுமாறு கூறினாராம். அஜீத்தும் டவுன்லோட் செய்தாராம். அதில் இருந்து ஆத்திச்சூடியும் கையுமாக திரிகிறாராம்.
மேலும் தனது மகள் அனௌஷ்காவையும் ஆத்திச்சூடியை படிக்குமாறு கூறியுள்ளாராம். அஜீத் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும்.
Comments


Click it and Unblock the Notifications