Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தல கையால பிரியாணி சாப்பிட முடியலையே: பில்லா வி்ல்லன் வருத்தம்
சக்ரி டோலாட்டியின் பில்லா 2 படம் மூலம் தமிழிழுக்கு வரும் இந்தி வில்லன் சுதான்ஷு பாண்டே. அவர் தனது பில்லா 2 அனுபவங்களைப் பற்றி கூறுகையில்,
பில்லா 2 படத்தில் அப்பாஸி கேரக்டருக்கு சரியான ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் சக்ரி டோலாட்டி. இணையதளத்தில் எனது புகைப்படத்தை பார்த்த அவர் உடனே என்னை போனில் தொடர்பு கொண்டார். நாங்கள் சந்தித்தபோது நீதான்ய்யா அப்பாஸி என்றார்.
பில்லா 2ல் மது, மாதுவுடன் சொகுசு வாழ்க்கை வாழும் டான் நான். இந்த கதாபாத்திரத்திற்காக நிறைய சாக்லேட், மில்க் ஷேக், காரமான உணவு வகைகள் சாப்பிட்டு எடையைக் கூட்டினேன். அஜீத் குமார் தான் ஒரு பெரிய ஸ்டார் போன்றே நடந்துகொள்ளமாட்டார். அவ்வளவு எளிமையானவர். அனைவருக்கும் உதவக்கூடியவர்.
தல கையால செய்யும் சுவையான பிரியாணி பற்றி பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் சாப்பிட கொடுத்து வைக்கவில்லை. எனக்கும், சென்னைக்கும் உள்ள ஒரே தொடர்பு பில்லா 2 தான். மேலும் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
பில்லா 2 குழுவினருக்கு அஜீத் குமார் தன் கையாலேயே சமைத்து சுவையான பிரியாணி விருந்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.