Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தொப்பி, மாஸ்க் அணிந்து வாரணாசியில் அஜித்.. தெருக்கடையில் ரசித்து சாப்பிட்டார்.. கடைக்காரர் வியப்பு!
சென்னை: நடிகர் அஜித்குமார் நண்பர்களுடன் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு தெருக்கடையில் ருசித்து சாப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
சினிமாவை மிரட்டிய கொடூர கொரோனா .. விஜய், அஜித் படங்கள் இல்லாத 2020.. சோலோவாக அசத்திய யோகிபாபு!
ஹூமா குரேஸி
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பாவும் வில்லனாக நடிக்கிறார்.
சேசிங் காட்சி
வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. கொரோனா காரணமாக, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, அஜித் பைக்கில் இருந்து விழுந்து காயம் அடைந்தார்.
நண்பர்களுடன் வாரணாசி
இதனால் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சி ஒன்றை, டெல்லி அல்லது ராஜஸ்தானில் எடுக்கப்பட இருப்பதாகப் படக்குழு கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் வாரணாசிக்கு சமீபத்தில் சென்றுள்ளார்.
தொப்பி மாஸ்க்
அங்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவர், பின்னர் வரலாற்றுப் புகழ் மிக்க நகரமான சாரநாத்துக்கும் சென்றுள்ளார். வாரணாசியில் அவர் தெருக்கடைகளில் நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்ததால், யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை.
விரும்பி சாப்பிட்டார்
மாஸ்க்கை கழற்றிய பிறகு அவர் யார் என்பது அங்குள்ளவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபம் கேசரி என்பவர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் கூறும்போது, எங்கள் கடையில் அவரைப் பார்த்ததும் ஆச்சரியமடைந்தேன். எங்கள் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டார்.
பதிவு செய்தார்
மற்ற டூரிஸ்ட்களை போலவே அவரும் நின்று கொண்டே சாப்பிட்டார். மறுநாளும் வந்தார். சில உணவு வகைகளை எப்படி செய்வது என்று கேட்டுத் தெரிந்துகொண்ட அவர், போனில் வீடியோவாக பதிவும் செய்துகொண்டார்' என்று தெரிவித்துள்ளார்.