Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஆக்சன் திரில்லர் கதை ரெடி.. கார்த்திக் நரேன் உடன் இணைய முடிவு.. புது ரூட்டை பிடிக்கும் அஜித்?
நடிகர் அஜித் பெரும்பாலும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.
சென்னை: நடிகர் அஜித் பெரும்பாலும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது.
நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் எச். வினோத்தான் இயக்குகிறார்.
எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த நிலையில் அஜித் தனது அடுத்த படத்திற்காக வேகமாக தயாராகி வருகிறார்.
அசுரன் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் பட்டம்... வைரலாகும் புகைப்படம்.. பெரும் சர்ச்சை!
எப்படி
இந்த நிலையில் அஜித் நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்று நேற்று தகவல்கள் வந்தது. புஷ்கர் காயத்திரி, மாயா இயக்குனர் அஷ்வின், மகிழ் திருமேனி மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.
கார்த்திக் நரேன் அஜித்
இதில் அஜித்திற்கு தற்போது கார்த்திக் நரேன் கதை பிடித்துவிட்டதாக செய்திகள் வருகிறது. ஆக்சன் திரில்லர் கதை இது என்று கூறுகிறார்கள். கிரைம் ஜானர் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் என்ன
அதே சமயம் இந்த படத்தில் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதற்கான திரைக் கதையை முழுமையாக எழுதும் பணியில் தற்போது கார்த்திக் நரேன் ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் நரேன் எடுத்துள்ள மாபியா படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வருகிறது.
என்ன படம்
இவர் இயக்கிய நரகாசுரன் பட தயாரிப்பு பிரச்சனை காரணமாக பாதியில் நின்றது. கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இடையே இதனால் சண்டை கூட வந்தது. கடைசியில் இந்த படம் முழுமையாக எடுக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில்தான் இவர் அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது.