Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
திரையுலகினரின் டைம்பாஸ் போராட்ட பந்தல் பக்கமே தலயை காட்டாத தல
சென்னை: திரையுலகினர் இன்று நடத்திய டைம்பாஸ் போராட்டத்தில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் இன்று ஒரு நாள் அடையாள மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் யாருமே மவுனமாக இல்லை என்பது தான் வருத்தம்.
கமல்
விஜய் முதல் ஆளாக போராட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால் அவர் கூட மவுனமாக இல்லாமல் சக நடிகர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
வரவே இல்லை
திரையுலகினர் நடத்திய காமெடி டைம்பாஸ் போராட்டத்தில் அஜீத் குமார் கலந்து கொள்ளவில்லை. ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்தும் அஜீத் வரவில்லை.
வரலட்சுமி
காலை 9 மணிக்கு துவங்கிய போராட்டம் ஷார்பாக 1 மணிக்கு முடிந்துவிட்டது. இந்த போராட்டத்தில் தற்போதைய ஹீரோயின்களான தன்ஷிகா, வரலட்சுமி மட்டுமே கலந்து கொண்டனர்.
நயன்தாரா
கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவை போராட்ட பந்தல் பக்கம் ஆளையே காணவில்லை. அவர் மட்டும் அல்ல கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் என்று முன்னணி நடிகைகள் யாருமே வரவில்லை.
டி.ஆர்.
சிம்பு, அவரது தந்தை டி.ஆர்., சரத்குமார், ராதிகா, ராதாரவி, சந்தானம், விக்ரம் பிரபு, அதர்வா, கவுதம் கார்த்திக், வடிவேலு என பலர் மிஸ்ஸிங். விஷால் தலைமையை பிடிக்காமல் சிலர் போராட்டத்திற்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.