Vidaamuyarchi: அஜித்தே.. விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்.. சந்தோஷ வெள்ளத்தில் அஜித் ரசிகர்கள்!

சென்னை: அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவித்த பின்னரும், படத்தின் படப்பிடிப்பு முடிவடையாமல் நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இதனால் படம் சொன்னபடி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா? இரண்டு ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா என அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு செம ஸ்வீட்டான அப்டேட்டினை படக்குழு கொடுத்துள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என அதிகாரப்பூர்வமாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு செம குஷியான, அப்டேட்டாக உள்ளது. இந்தத் தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அஜித் நடிப்பில் அடுத்த ஆண்டு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இந்த டிசம்பர் மாதத்திலேயே நிறைவடைந்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் இல்லமல், அடுத்த ஆண்டு அக்டோபர் வரை அஜித் எந்தப் படத்திலும் கமிட் ஆகப்போவதில்லை. மேலும் 2025ஆம் ஆண்டின் செப்டம்பர் அக்டோபர் வரை அஜித் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

vidaamuyarchi ajithkumar magizh thirumeni

இதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து திட்டம்போட்டு, துபாயில் தீவிர பயிற்சியில் உள்ளார். இதனால், பொங்கலுக்கு ஒரு படமும் அவரது, பிறந்த நாளுக்கு ஒரு படமும் படம் படங்களை ரிலீஸ் செய்ய படக்குழுக்கள் திட்டமிட்டுள்ளது. இதில் விடாமுயற்சி படம், ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். மற்றொரு படமான குட் பேட் அக்லி படத்தின் புகைப்படங்கள், போஸ்டர்கள் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்தப் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்கும் படபிடிப்பு மற்றும் டப்பிங் இரண்டுமே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதில் விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது.

vidaamuyarchi ajithkumar magizh thirumeni

படப்பிடிப்பு: இது தொடர்பாக படக்குழு தெரிவித்துள்ள, அறிவிப்பில், “ விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இன்று அதாவது டிசம்பர் 22ஆம் தேதி சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். படம் 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்கில் ரிலீஸ் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி, அஜித் குமாருக்கு எழுதியுள்ள, நன்றி மடலில், “ சார், உங்கள் மீது அளவற்ற அன்பும், பெரும் மரியாதையும் உள்ளது. நீங்கள் எங்களின் வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் மிகவும் சாதரணமாக இருந்தே எங்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் கொடுத்துள்ளீர்கள். அதனை ஒட்டுமொத்த விடாமுயற்சி படக்குழுவுக்கும் அளித்துள்ளீர்கள்.

vidaamuyarchi ajithkumar magizh thirumeni

விடாமுயற்சி பொங்கல்: மேலும், தனிப்பட்ட முறையில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் சப்போர்ட்டுக்கும் நன்றிகள். இதனை எனக்கு நிங்கள் முதல் நாளில் இருந்து இந்த கடைசி நாள் வரை கொடுத்துள்ளீர்கள். இதனாலே உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாகியுள்ளது சார்” எனத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டு பொங்கல்,விடாமுயற்சி பொங்கல் என ரசிகர்கள் கொண்டாட்ட வெள்ளத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X