Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்னை கர்ப்பமாக வற்புறுத்தினார்: யுவராஜ் சிங்கின் தாய் மீது பெண் பரபர புகார்
மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாய் தன்னை கர்ப்பமாக வற்புறுத்தியதாக பிக் பாஸ் 10 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் 10வது சீசன் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா கலந்து கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு திருமணமான நான்கே மாதங்களில் கணவரை பிரிந்துவிட்டார் ஆகான்ஷா.
தனது மாமியார் ஷப்னம் சிங் பற்றி ஆகான்ஷா நிகழ்ச்சியில் கூறியதாவது,
மாமியார்
எனக்கும் ஜொராவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. யுவியாலும் பிரச்சனை இல்லை. என் மாமியார் தான் பெரும் பிரச்சனையாக இருந்தார்.
தேனிலவு
நானும், ஜொராவரும் தேனிலவுக்கு சென்றபோது கூட யுவராஜ் சிங்கின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்தது. எங்களை அவர்களின் கண் பார்வையிலேயே வைக்க வந்தார்கள்.
கர்ப்பம்
என்னை கர்ப்பமாகுமாறு என் மாமியார் ஷப்னம் வற்புறுத்தினார். என் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றார் ஆகான்ஷா.
பொய்
ஆகான்ஷா கூறியது எல்லாம் பொய். அவர் எங்களின் பெயரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார். எங்கள் மீது பழி சுமத்தி தன் மீது அனைவரும் பரிதாபப்பட செய்கிறார் என்று ஷப்னம் தெரிவித்துள்ளார்.