Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அக்கினேனி குடும்பத்தின் தாத்தா, மகன், பேரன் நடிக்கும் தெலுங்குப் படம்!
ஹைதராபாத்: புதிதாக உருவாகும் தெலுங்கு படம் ஒன்றில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் சேர்ந்து நடிக்கின்றனர்.
ஒரே குடும்பத்திலிருந்து வந்த மூன்று தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் குடும்பத்துக்கு 'அக்கினேனி' என்று பெயர். நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா என மூன்று தலைமுறையாக திரையில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.
இந்த மூன்று தலைமுறையைச் சேர்ந்த நடிகர்களும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
நாகேஸ்வரராவ், அவருடைய மகன் நாகார்ஜுனா, பேரன் நாக சைதன்யா ஆகிய மூவரும் 'மனம்' என்ற புதிய தெலுங்குப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு அனூப் ரூபன்ஸ் இசையமைக்கிறார். நாக சைதன்யா ஜோடியாக சமந்தாவும், நாகார்ஜுனா ஜோடியாக ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள்.
பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஸ்ரேயாவுக்கு இந்தப் படம் மறு வாழ்வு அளித்துள்ளது.
அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை நேற்று ஹைதராபாதில் எளிமையாக நடந்தது. தெலுங்குத் திரையுலகினர் வாழ்த்தினர்.