Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த பிரியங்காவ பத்தி என்ன நினைக்கிறீங்க? கமல் கேள்வியே ஒரு தினுசா இருக்கே.. என்ன ஆகப் போகுதோ!
சென்னை: அக்ஷரா விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த பிரியங்காவுக்கு சரியான நோஸ் கட்டாக இன்றைய 2வது புரமோ இடம் பெற்றுள்ளது.
ராஜுவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்த போது பிரியங்கா வாய் விட அவருக்கும் அக்ஷராவுக்கும் இடையே அது பிரச்சனையாக மாறியது.
லீட் ரோல் கிடைக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு..மனம் திறந்த கருப்பு நிறத்தழகி சரண்யா
ராஜு அக்ஷராவிடம் போட்ட சண்டைக்கு சமாதானம் செய்த நிலையில், பிரியங்கா அக்ஷரா பஞ்சாயத்தை கமல் சார் கையில் எடுத்துள்ளார்.
76வது நாள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கி 76வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்ப காத்திருக்கிறது. இன்னும் வெறும் 4 வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதாக கமல் மீண்டும் அழுத்தி சொல்வதை பார்த்தால் வீட்டில் இருக்கும் 11 பேரை எப்படி வெளியேற்றலாம் என்கிற திட்டத்தை பிக் பாஸ் குழு போட்டு வருவதையே அது காட்டுகிறது.
அக்ஷராவிடம் கேள்வி
பாவனிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்வது போல அவருக்கு ஆப்பு வைக்கும் வேலைகளை செய்து வரும் பிரியங்கா அக்ஷராவுக்கு எதிராகவே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அக்ஷரா சோக கதைக்கு ராஜு லைக் போட்டதற்கே பாசிட்டிவ் பிரியங்கா அந்த அளவுக்கு பிரச்சனை பண்ண நிலையில், அதே பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருவது குறித்து பேச அக்ஷராவுக்கு கமல் கொடுத்துள்ள வாய்ப்பு இரண்டாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது.
இந்த பிரியங்கா
வார வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமே பிரியங்கா தான் என கமல் சாரே முடிவு கட்டி விட்டார் போல. ஸ்ட்ராங் பிளேயர் என மக்கள் சொல்லணும் என போன வாரம் குட்டிய கமல் இந்த முறை அக்ஷராவிடம் "இந்த பிரியங்காவ பத்தி என்ன நினைக்கிறீங்க?" என கேட்ட தொனியே பிரியங்காவின் தலையை தொங்க போட வைத்து விட்டது.
தக்காளி சட்னி
ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா தன்னிடம் பிரச்சனை பண்றாங்க என்றும், அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என ஏற்கனவே வருணிடம் சொன்ன அதே வசனத்தை கமல் சாரிடமும் சொல்லி நன்றாக கொளுத்தி போட்டுள்ளார். பிரியங்காவின் ரியாக்ஷனை பார்த்தால் அக்ஷராவுக்கு அடுத்து என்ன ஆப்பு வைக்கலாம் என யோசிப்பது போலவே இருக்கிறது.