Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிகினி போட்டோவில் இருப்பது நான் இல்லை, அது போலி: நடிகை அக்ஷரா
மும்பை: ஆரம்பம் படத்தில் நடித்த அக்ஷரா கவுடா இணையதளத்தில் வெளியாகியுள்ள தன்னுடைய போலி கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
அஜீத், நயன்தாரா நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நடிக்க மும்பையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து அக்ஷரா கூறுகையில்,
என்னுடைய போலி புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருவது வருத்தம் அளிக்கிறது. பிகினி புகைப்படங்களில் இருப்பது நான் அல்ல. மேலும் என் பெயரில் பல போலி ஃபேஸ்புக் கணக்குகள் உள்ளன. நான் சமூக வலைதளங்களில் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சென்னையில் படப்பிடிப்பில் உள்ளதாக போலி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர். நான் கடந்த 2 மாதங்களாக சென்னையில் இல்லை. இதை எல்லாம் பார்க்கையில் கோபம் வருகிறது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன் என்றார்.