ரஜினியின் 2.ஓ வில்லன் அக்ஷய் குமார் லண்டனில் கைது!
உரிய விசா இல்லாமல் வந்ததால், ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் பிரதான வில்லன் அக்ஷய் குமாரை லண்டன் போலீசார் விமான நிலையத்தில் தடுத்து வைத்தனர்.
ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமார் ஒரு இந்திப் படத்தின் ஷூட்டிங்குக்காக நேற்று லண்டன் சென்றார்.

ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாகக் கூறி விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரைத் தடுத்து வைத்த அதிகாரிகள், பிரச்சனையை சரிசெய்த பிறகு அவரை விடுவித்தனர்.
அவரை விமான நிலையத்தில் கண்டவுடன் ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அங்கு இருந்த 2 மணி நேரமும் அக்ஷய் குமார் தனது ரசிகர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
Comments


Click it and Unblock the Notifications