Don't Miss!
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- News 4 மணி வரை உக்கிரமா இருப்பேன்! சுட்டெரிக்கும் வெயில்..வயதானவர்களுக்கு வார்னிங்! எப்போது வாக்களிப்பது?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமார்
மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தாராள குணம் மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. சமீபத்தில் இவர் கொரோனா நிவாரண பணிக்காக ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர் நடத்தி வரும் என்ஜிஓ.,விற்கு தான் இந்த நிவாரண தொகையை அக்ஷய் குமார் அளித்துள்ளார்.
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கவுதம் காம்பிர், ஒவ்வொரு முறையும் கிடைக்கும் உதவி புதிய நம்பிக்கையை தருகிறது. தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்குவதற்காக கவுதம் காம்பிரின் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமாருக்கு பலப்பல நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்போது இருப்பது மிக கடினமான நேரம், கவுதம் காம்பிர். என்னால் உதவி முடிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நெரக்கடியில் இருந்து விரைவில் மீண்டு வர விரும்பிகிறேன். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத துவக்கத்தில் அக்ஷய் குமாருக்கு கொரானா தொற்று உறதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவரகளின் ஆலோசனைப்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் தற்போது நடித்து வரும் ராம் சேது படத்தின் சூட்டிங்கில் இருந்த போது அக்ஷய் குமாருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.
இதனை ட்விட்டரில் தெரிவித்த அக்ஷய் குமார், தான் விரைவில் மீண்டும் வருவேன் என நம்பிக்கை தெரிவித்தார். அததைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு அக்ஷயின் மனைவி ட்விங்கிள் கண்ணா, தனது கணவர் வீடு திரும்பி விட்டதாக அறிவித்தார்.
அக்ஷய் குமாருடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட ட்விங்கிள் கண்ணா, பாதுகாப்பாக, நல்ல முறையில் திரும்பி வந்து விட்டார். அனைத்தும் நன்மைக்கே என குறிப்பிட்டிருந்தார். அக்ஷய் குமார் தற்போது ரோஹித் ஷெட்டி இயக்கும் சூர்யவம்சம் படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பச்சன் பாண்டே, ராம் சேது, பெல் பாட்டம், ப்ருத்விராஜ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.