Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, விவசாயி அவதாரம் எடுத்த முன்னணி நடிகர்!
Recommended Video
மும்பை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பொதுவில் சமூக விஷயங்களைப் பற்றிப் பேசுவதோடு, படத்திலும் சமூக நோக்கம் கொண்ட கருத்துகளைச் சொல்வார். சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'பேட்மேன்' படம் இப்படியொரு விஷயத்தைப் பேசியது.
தற்போது 'கேசரி' படத்தின் ஷூட்டிங்கிற்காக மஹாராஷ்டிராவின் சடாரா பகுதியில் இருக்கும் கிராமத்தில் இருக்கிறார். அந்தப் பகுதியில் பிம்போடு பட்ரக் எனும் கிராம மக்களுக்கு உதவி செய்யும் விதமாக 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.
அந்தக் கிராமத்தில் மழைநீரைச் சேகரிக்க குளம் வெட்டுவதற்காக இந்தப் பணத்தைக் கொடுத்து உதவி செய்துள்ளார் அக்ஷய். மேலும், படத்தின் ஷூட்டிங்கை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு கிராமத்து மக்களோடு இணைந்து மண்வெட்டியை எடுத்துக்கொண்டு களத்திலும் இறங்கி இருக்கிறார்.
கடும் வறட்சியால் அவதியுற்றிருந்த அந்தக் கிராமத்தில் வசிக்கும் கிட்டத்தட்ட 10,000 மக்களும் அக்ஷய் குமாரின் இந்த உதவியால் மகிழ்ந்துபோயுள்ளனர். அதுபோக, அக்ஷய் பேசிய பேச்சு அவர்களை நெகிழச் செய்துள்ளது.
"உங்கள் கண்களில் நீர் வருவதைப் பார்க்க விரும்பவில்லை. குழாய்களில் நீர் வருவதைத்தான் பார்க்க விரும்புகிறேன்" எனக் கூறினாராம் அக்ஷய் குமார். அக்ஷய் சமீபத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கையால் சமூக செல்வாக்கு பெற்ற நபர் என்பதற்கான விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.