Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரஜினி வில்லனுக்கு ஒரு நாள் சம்பளம் ஒரு கோடியாமே...!
சென்னை: வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், தனது அடுத்த படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் என்ற கணக்கில் ரூ. 70 கோடி சம்பளமாக பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அக்ஷய்குமார். இவரது படம் குறைந்த பட்ச வசூலையாவது கொடுத்து விடும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.
இந்த வருடம் இவர் நடித்து வெளிவந்த 3 படங்களும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், அடுத்ததாக அவர் ஜாலி எல்.எல்.பி- 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 65 நாட்கள் நடைபெற இருக்கிறதாம். டப்பிங்கோடு சேர்த்து இப்படத்திற்காக 70 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் அக்ஷய். எனவே, நாளொன்றுக்கு ரூ. 1 கோடி வீதம் இந்த 70 நாட்களுக்கு ரூ. 70 கோடி சம்பளமாக அவர் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழிலும் சங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படத்தில் நடித்து வருகிறார் அக்ஷய். இப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு தமிழிலும் முன்னணி வில்லனாக அக்ஷய் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாலி எல்.எல்.பி முதல் பாகம் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்து மனிதன் என்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.