Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
லாக்டவுனில் தன் சகோதரிக்காக தனி விமானம் ஏற்பாடு செய்தாரா? பிரபல ஹீரோ அதிர்ச்சி..திடீர் எச்சரிக்கை!
சென்னை: தனது சகோதரி டெல்லி செல்வதற்காக தனி விமானத்தை அமர்த்தியதாக வந்த செய்தியை, பிரபல நடிகர் மறுத்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இதையடுத்து தமிழில் ஹிட்டான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறார். இதை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார்.
சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்ற பிரபல இளம் இசை அமைப்பாளர் திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
லாக்டவுன்
கியாரா அத்வானி ஹீரோயினாக நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக, தியேட்டரில் ரிலீஸ் ஆகவேண்டிய இந்தப் படம் ஓ.டி.டியில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் தனுஷ், சாரா அலிகான், ஆகியோருடன் அட்ரங்கி ரே என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.
சிறப்பு விமானம்
நடிகர் அக்ஷய்குமார் தாராள மனம் கொண்டவர். திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ. 1. 5 கோடி வழங்கினார். கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் இந்த லாக்டவுனில், தனது சகோதரி அல்கா பாட்டியா, அவர் குழந்தைகள் பாதுகாப்பாக டெல்லிக்கு செல்ல, சிறப்பு விமானம் ஒன்றைத் தனியாக ஏற்பாடு செய்தார் என்று செய்தி வெளியானது.
பொய்யானது
அவர்களை கவனித்துக் கொள்ள 4 விமானப் பணிப்பெண்களும் சென்றதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள நடிகர் அக்ஷய்குமார், இந்தக் கதை முழுவதுமே பொய்யானது என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:
நடவடிக்கை
'எனது சகோதரி லாக்டவுன் நேரத்தில் எங்கும் செல்லவில்லை. அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான். இவர்களுக்குத் தனி விமானத்தை அமர்த்தினேன் என்று சொல்வது போலியானது' என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்றத் தவறானச் செய்திகளை வெளியிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.