Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இவருக்கு மட்டும் அது எப்படி சாத்தியமாகுது? மீண்டும் ஒடிடியில் ரிலீசாகும் அக்ஷய் குமார் படம்!
மும்பை: கொரோனா பரவல் குறைந்து மீண்டும் எப்போது தியேட்டர்கள் திறக்கும் படங்களை எப்படி ரிலீஸ் பண்ணலாம் என முன்னணி நடிகர்கள் காத்துக் கொண்டு இருக்கும் நிலையில், அடுத்தடுத்து தனது படங்களை ஒடிடியில் வெளியிட்டு லாபம் பார்த்து வருகிறார் அக்ஷய் குமார்.
இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவான லக்ஷ்மி படத்தை கடந்த ஆண்டு தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு இருந்தார்.
ஆண் குழந்தைக்கு அம்மாவானார் பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல்.. குவியும் வாழ்த்து!
இந்நிலையில், பெல்பாட்டம் படமும் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெல் பாட்டம்
இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், ஹூமா குரேஷி, வாணி கபூர் நடித்துள்ள படம் பெல் பாட்டம். கடந்த ஆண்டு நாடு முழுவதும் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், பிரத்யேக அனுமதி பெற்று வெளிநாட்டில் குவாரண்டைன் செய்யப்பட்டு இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினர்.
25 கோடி
முன்னணி சினிமா நடிகர்கள் ஒரு கோடி ரூபாய், இரண்டு கோடி ரூபாய் என நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு அதிகபட்சமாக 25 கோடி ரூபாய் நிதி வழங்கி அசத்தினார் அக்ஷய் குமார். மேலும், கொரோனா விழிப்புணர்வு விளம்பரங்களிலும் நடித்து மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கடும் விமர்சனம்
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான லக்ஷ்மி திரைப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகப்படியான மக்கள் அந்த படத்தை பார்த்ததாகவும் நல்ல வசூலை படம் ஈட்டியதாகவும் படக்குழு அறிவித்தது.
ஒடிடி நோக்கி
முன்னணி நடிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் படங்களை ஒடிடியில் வெளியிட முயற்சித்து வருகின்றனர். தமிழில் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று நேரடி ஒடிடி ரிலீசாக வெளியானது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி 16 நாட்களிலேயே ஒடிடியில் வெளியானது. சமீபத்தில் சல்மான் கானின் ராதே திரைப்படமும் நேரடியாக ஒடிடியில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
மீண்டும் ஒடிடியில்
பல நூறு கோடிகளை கொடுத்து புதிய படங்களை வாங்க நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜி சினிமாஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. லக்ஷ்மி படத்தைத் தொடர்ந்து பெல் பாட்டம் படத்தையும் ஒடிடியில் அக்ஷய் குமார் வெளியிடப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெல் பாட்டம் படத்திற்கு பெரும் தொகை பேசப்பட்டு வருகிறதாம்.