Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மகன் ஆரவ்வின் பிறந்தநாளை சாகசத்துடன் கொண்டாடிய அக்ஷய் குமார்
சென்னை: பாலிவுட் ஹீரோக்களில் மிகவும் பிஸியாகவும் பரபரப்பாகவும் இருந்து வரும் பல ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் தனது மகன் ஆரவ்வின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதியான நேற்று தன் குடும்பத்துடன் லண்டனில் கொண்டாடினர். இதை ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்ஷய் குமார் முந்தைய காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வந்த ஒரு பிஸியான நடிகர். 52 வயதான அவர் இன்றும் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்; நடித்திருந்தார்.
எந்த காலமானாலும் சரி, எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சரி அக்ஷய் குமார் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தகுந்த நேரத்தை ஒதுக்கி அவர்களோடு சந்தோஷமாக செலவிடுவார். அக்ஷய் குமார் தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக லண்டனுக்கு சென்றுள்ளார்.
களத்தில் இறங்கிய அஜித் பேன்ஸ்.. 2 நாளில் எல்லா பேனர்களும் காலி.. கட் அவுட்களை அகற்றி அசத்தல்!
அவரின் பிறந்த நாளான செப்டம்பர் 9ஆம் தேதியன்று அங்கு கொண்டாடினர். அப்போது ட்விங்கிள், அக்ஷய் மற்றும் நிதாரா மூவரும் ஒரு ஆபத்தான பாலத்தில் நடந்து சென்றனர். அங்கு அவர்கள் மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை ட்விங்கிள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவிற்கு இந்த பிறந்தநாள் மிகுந்த சாகசங்கள் நிறைந்த பிறந்த நாள் கொண்டாட்டமாக இருந்தது என்று பதிவிட்டிருந்தார்.
View this post on Instagram@akshaykumar wishes son #aaravkumar the sweetest birthday 🎁 image via @akshaykumar
A post shared by Niche Lifestyle (@nichelifestyle) on
அதைத் தொடர்ந்து நேற்று அக்ஷய் குமாரின் மகன் ஆரவ்வின் 17ஆவது பிறந்தநாளையும் அங்கு குதூகலமாக கொண்டாடினர். மகன் மீது கொண்டுள்ள அன்பை தெரிவிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது தந்தையிடம் இருந்து நான் கற்று கொண்டது என்னவென்றால், ஏதாவது ஒரு இடத்தில் நான் குழப்பம் அடைந்தால், குழம்புவதற்கு பதிலாக அதை உடனே நான் என் தந்தையிடம் அதை எடுத்து செல்லும் உரிமையை கொடுத்திருந்தார்.
அதே போல் நானும் உன்னுடன் என்றும் பக்கபலமாக இருந்து உன்னை வழி நடத்துவேன். ஹாப்பி பர்த்டே ஆரவ் என்று தனது மகன் ஆரவ்விற்க்காக ஒரு இதயபூர்வமான குறிப்பை போஸ்ட் செய்திருந்தார்.
இப்படி குதூகலமும் அன்புப் பரிமாற்றங்களுடன் அப்பா, மகன் இருவரது பிறந்தநாளும் மிகுந்த சந்தோஷத்துடன் கொண்டாடப்பட்டது. இத்தனை பிஸியான வேளையிலும் அக்ஷய் குமார் தனது குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி முக்கியத்துவம் கொடுத்தது பாராட்டத்தக்க விஷயம்.