Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
யோகா பண்ணுங்க.. நல்லா இருக்கும்.. ஸ்டேன்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு அட்வைஸ்!
சென்னை : தினமும் யோகா பண்ணுங்க உடல் நன்றாக இருக்கும் என்று ஸ்டேன்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு கூறியுள்ளார்.
Recommended Video
ஸ்டேன்ட் அப் நகைச்சுவை கலைஞரான அலெக்ஸாண்டர் பாபு ஸ்டேன்ட் அப் காமெடியனை தாண்டி நல்ல யோகா மாஸ்டரும் கூட. சமீபத்தில் இவர் நடத்திய அலெக்ஸ் இன் ஒன்டர்லேண்ட் ஸ்டேன்ட் அப் காமெடி நிகழ்ச்சி பெரிய அளவிளான வெற்றியை பெற்றது.
இவர் செய்த நகைச்சுவை அனைத்தும் மிக பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இவர் இசையையும் அதனுடன் நகைச்சுவையையும் கலந்துகட்டி செய்த நகைச்சுவை மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் சில மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டார் .
இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக அலெக்ஸ் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். இதில் தினம் தோறும் காலை 4 மணிக்கு எழுந்து யோகா செய்வதாகவும் இதை நீங்களும் செய்யுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
மேலும் தான் இப்போது அணித்திருக்கும் சட்டை பரிசாக வந்தது. இதில், வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று போட்டிருக்கிறது இது நூறு சதவீதம் உண்மை என்றும் கூறினார். மேலும் சட்டையை பரிசளித்தவருக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் வந்து பணியாற்றும் நிறைய பேர் கூலித்தொழிலாளிகள் தற்போது ஊரடங்கு சமயத்தில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று தனது காணொளியில் பதிவு செய்துள்ளார்.
அலெக்ஸாண்டர் பாபு ஐடி கம்பெனியில் பணிபுரிந்த காலத்தில் இருந்தே யோகா மற்றும் இசையை கற்று வருகிறார். நல்ல நகைச்சுவை குணமுடைய இவர் இசையில் நகைச்சுவையை கலந்து அதை மக்களுக்கு கொடுத்து மகிழ்கிறார்.
இவரது ரசிகர்கள் இவர் இசை கருவியில் கை வைத்தாலே எழுந்து தயாராகி விடுவார்கள் ஏனெனில் அப்படி இசையை நன்கு அறிந்து அதில் விளையாட கூடியவர் அலெக்ஸாண்டர் பாபு.
அதே போல் இந்த காணொளியிலும் மறக்காமல் தனது ரசிகர்களை குஷிபடுத்த சித்ஶ்ரீராம் பாடிய 'உன்ன நினைச்சு' பாடலையும் அதன் தொடர்ச்சியாக மலேசியா வாசுதேவன் பாடிய 'தங்க சங்கிலி மின்னும் பைங்கிளி' பாடலையும் வாசித்த படி பாடியுள்ளார்.