Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
நடிகை ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை: தனது தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்தியதால் நடிகை ஆலியா பட் அதிர்ச்சி அடைந்தார்.
பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகை ஆலியா பட். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். பிரபல திரைப்பட இயக்குனர் மகேஷ் பட் - நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் இளைய மகள் தான் ஆலியா.
ஆலியாவின் மூத்த சகோதரி ஷாஹீன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழா தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. முதலில் இந்த விழாவில் அக்காவை நினைத்து ஆலியா கதறி அழுத வீடியோ வைரலானது. பிறகு மது பழக்கம் குறித்து பூஜா பட் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவின் போது, ஆலியா பட் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வி ஆலியாவின் தந்தை மகேஷ் பட்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அவர், மிகவும் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார். தன்னிலை மறந்து மகேஷ் பட் கத்தியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆலியா பட் மிகவும் பயந்துவிட்டது அவரது முகத்தில் தெரிந்தது.
இதெல்லாம் நடக்கும் என தான் முன்பே சொன்னதாக ஆலியா பட் அப்போது முணுமுணுத்தார். ஷாஹீன் உள்ளிட்டோர் மகேஷ் பட்டை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் தான் சொல்ல வந்ததை, ஆவேசமாக சொல்லி முடித்துவிட்டு தான் அமைதியானார்.