Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க' ரேஞ்சுக்கு கோபத்தில் கத்திய அப்பா.. பயத்தில் உறைந்த பிரபல நடிகை
நடிகை ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை: தனது தந்தை மகேஷ் பட் நிருபர்களை பார்த்து ஆவேசமாக கத்தியதால் நடிகை ஆலியா பட் அதிர்ச்சி அடைந்தார்.
பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகை ஆலியா பட். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர். பிரபல திரைப்பட இயக்குனர் மகேஷ் பட் - நடிகை சோனி ரஸ்தான் தம்பதியின் இளைய மகள் தான் ஆலியா.
ஆலியாவின் மூத்த சகோதரி ஷாஹீன் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழா தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. முதலில் இந்த விழாவில் அக்காவை நினைத்து ஆலியா கதறி அழுத வீடியோ வைரலானது. பிறகு மது பழக்கம் குறித்து பூஜா பட் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவின் போது, ஆலியா பட் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஒரு செய்தியாளர் கேட்ட கேள்வி ஆலியாவின் தந்தை மகேஷ் பட்டுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அவர், மிகவும் ஆவேசமாக கத்த ஆரம்பித்துவிட்டார். தன்னிலை மறந்து மகேஷ் பட் கத்தியது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆலியா பட் மிகவும் பயந்துவிட்டது அவரது முகத்தில் தெரிந்தது.
இதெல்லாம் நடக்கும் என தான் முன்பே சொன்னதாக ஆலியா பட் அப்போது முணுமுணுத்தார். ஷாஹீன் உள்ளிட்டோர் மகேஷ் பட்டை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் அவர் தான் சொல்ல வந்ததை, ஆவேசமாக சொல்லி முடித்துவிட்டு தான் அமைதியானார்.