Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா உறுப்பினர்களாக, பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விருது விழா இது.
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
அடுத்த வருடம்
93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி இருப்பதால், விருது விழா 2 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விருது நிகழ்ச்சிகள், அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
ஹிரித்திக் ரோஷன்
இந்நிலையில், இந்த விழாவுக்கு, ஒவ்வொரு வருடமும் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். இந்த வருடம் 68 நாடுகளில் இருந்து 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஜோதா அக்பர்
'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக நடிகை ஆலியா பட்-டும் ஜோதா அக்பர், சூப்பர் 30 ஆகிய சிறந்த படங்களில் நடித்ததற்காக ஹிரித்திக் ரோஷனும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் 15 பேர் ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்றவர்கள். சிலர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
விஷூவல் எபெக்ட்ஸ்
இவர்கள் தவிர, இந்தியாவில் இருந்து ஆவணப்பட இயக்குனர்கள் நிஷ்டா ஜெயின், அமித் மாதேஷியா, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் மற்றும் சந்தீப் கமல், வடிவமைப்பாளர் நீடா லுல்லா, காஸ்டிங் இயக்குனர் நந்தினி ஶ்ரீகென்ட் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் அனுராக் காஷ்யப், அனுபம் கெர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!