Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா உறுப்பினர்களாக, பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விருது விழா இது.
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
அடுத்த வருடம்
93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி இருப்பதால், விருது விழா 2 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விருது நிகழ்ச்சிகள், அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
ஹிரித்திக் ரோஷன்
இந்நிலையில், இந்த விழாவுக்கு, ஒவ்வொரு வருடமும் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். இந்த வருடம் 68 நாடுகளில் இருந்து 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஜோதா அக்பர்
'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக நடிகை ஆலியா பட்-டும் ஜோதா அக்பர், சூப்பர் 30 ஆகிய சிறந்த படங்களில் நடித்ததற்காக ஹிரித்திக் ரோஷனும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் 15 பேர் ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்றவர்கள். சிலர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
விஷூவல் எபெக்ட்ஸ்
இவர்கள் தவிர, இந்தியாவில் இருந்து ஆவணப்பட இயக்குனர்கள் நிஷ்டா ஜெயின், அமித் மாதேஷியா, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் மற்றும் சந்தீப் கமல், வடிவமைப்பாளர் நீடா லுல்லா, காஸ்டிங் இயக்குனர் நந்தினி ஶ்ரீகென்ட் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் அனுராக் காஷ்யப், அனுபம் கெர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.