Don't Miss!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- News ஆக்கிரமிப்பு நிலமா? எவ வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரி உரிமத்தை ரத்து செய்ய மறுத்த ஹைகோர்ட்
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா உறுப்பினர்களாக, பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டின் உயரிய சினிமா விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, ஒவ்வொரு ஆண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம்.
உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்படும் விருது விழா இது.
உலகம் ஒருகணம் நிறமிழந்துபோனதாய் நெஞ்சுடைகிறேன்.. ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு.. வைரமுத்து உருக்கம்!
அடுத்த வருடம்
93 ஆவது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகள் அடுத்த வருடம் பிப்ரவரி 28 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி இருப்பதால், விருது விழா 2 மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது விருது நிகழ்ச்சிகள், அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
ஹிரித்திக் ரோஷன்
இந்நிலையில், இந்த விழாவுக்கு, ஒவ்வொரு வருடமும் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். இந்த வருடம் 68 நாடுகளில் இருந்து 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இந்தியாவில் நடிகர் ஹிரித்திக் ரோஷன், ஆலியா பட் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஜோதா அக்பர்
'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக நடிகை ஆலியா பட்-டும் ஜோதா அக்பர், சூப்பர் 30 ஆகிய சிறந்த படங்களில் நடித்ததற்காக ஹிரித்திக் ரோஷனும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அழைப்பு அனுப்பப்பட்டவர்களில் 15 பேர் ஏற்கனவே ஆஸ்கர் விருது பெற்றவர்கள். சிலர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
விஷூவல் எபெக்ட்ஸ்
இவர்கள் தவிர, இந்தியாவில் இருந்து ஆவணப்பட இயக்குனர்கள் நிஷ்டா ஜெயின், அமித் மாதேஷியா, விஷூவல் எபெக்ட்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் மற்றும் சந்தீப் கமல், வடிவமைப்பாளர் நீடா லுல்லா, காஸ்டிங் இயக்குனர் நந்தினி ஶ்ரீகென்ட் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கடந்த வருடம் இயக்குனர் அனுராக் காஷ்யப், அனுபம் கெர் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.