Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஒரு தொழில் தர்மம் வேண்டாமா.. இன்விடேஷன்ல இவ்வளவு மிஸ்டேக் இருக்கே!
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் ஒரு அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமண தேதி அறிந்த சந்தோஷத்தில் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் ரசிகர்கள் அந்த திருமண அழைப்பிதழை டிரெண்ட் செய்தனர்.
ஆனால், அது போலியான திருமண அழைப்பிதழ் என்பது தற்போது அதிலிருந்த பிழைகளால் தெரியவந்துள்ளது.
ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #Bigil
வைரலான அழைப்பிதழ்
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடக்கப் போவதாக பக்காவாட டிசைன் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழை கண்ட ரசிகர்கள் பலர், அதனை உண்மை என நம்பி அதிகளவில் ஷேர் செய்யத் தொடங்கினர்.
எதிர்பார்ப்பு
தீபிகா படுகோனே - ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ், சோனம் கபூர் - விராத் கோலியின் திருமணங்களுக்கு பிறகு பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படுவது ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் தான். ஆனால், தங்களது திருமணம் குறித்து இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
மிஸ்டேக்
அந்த திருமண அழைப்பிதழில் ஆலியா பட்டின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக அச்சிடப்பட்டுளது. மேலும், அதில், தந்தை பெயர் மகேஷ் பட்டிற்கு பிறகு முகேஷ் பட் என அச்சிடப்பட்டுள்ளது. இதுபோன்று மேலும், பல சின்ன சின்ன தப்புகள் அந்த போலியான திருமண அழைப்பிதழில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு
ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில் ஜனவரி 22, 2020ம் ஆண்டு ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியான போலியான திருமண அழைப்பிதழுக்கு இரு தரப்பும் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், எப்போது திருமண அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்ற கேள்விக்கும் அவர்கள் விடை அளிக்கவில்லை.