Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அந்த நடிகர் வேணாம்மா, நைசா நழுவிடுவார்: வாரிசு நடிகையை எச்சரிக்கும் தோழிகள்
Recommended Video
மும்பை: அந்த ஆளு வேண்டாம்மா என்று நடிகை ஆலியா பட்டை அவருக்கு நெருக்கமானவர்கள் எச்சரித்து வருகிறார்களாம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து பிரிந்துவிட்டார். முன்பும் கூட பிரிந்து சேர்ந்துவிட்டனர். ஆனால் இம்முறை பிரிந்தது பிரிந்தது தான் என்று தீர்க்கமாக உள்ளனர்.
இந்நிலையில் ஆலியா பட் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக பேச்சாக உள்ளது.
ஆலியா பட்
ஆலியா பட் நடிகர் ரன்பிர் கபூரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து அயன் முகர்ஜி இயக்கி வரும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டென்ஷன்
நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்து சிங்கிளாக இருக்கும் ரன்பிர் கபூரும், ஆலியாவும் காதலிப்பதாக பாலிவுட் நம்புகிறது. ஆனால் இதை கேட்டு ரன்பிர் தான் செம டென்ஷனில் உள்ளாராம்.
கண்டுபிடி
ஆலியாவுடன் தன்னை சேர்த்து யார் வதந்தியை பரப்புவது என்று கண்டுபிடிக்குமாறு தனது உதவியாளர்களிடம் கூறியுள்ளாராம் ரன்பிர். இந்த வந்தியால் தன் பெயர் கெடுவதாக ரன்பிர் ஃபீல் பண்ணுகிறாராம்.
எச்சரிக்கை
ரன்பிர் கபூர் வேண்டாம். அவர் ஒரு நாள் உன்னை கழற்றிவிட்டுவிடுவார் என்று ஆலியாவை அவருக்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்களாம்.
அப்படியா?
ரன்பிருடன் காதல் பற்றி ஆலியா கூறியிருப்பதாவது, இது போன்ற செய்திகளை படித்து நான் கூட குழம்பிவிடுகிறேன். அமைதி காப்பது நல்லது என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.(இதுக்கு பெயரு தான் நைசா நழுவுவதோ?)