இனிமே அந்த நடிகை கூட உன்ன பார்த்தேன், கொன்னுடுவேன்: காதலரை மிரட்டிய இளம்நடிகை
மும்பை: நடிகை ஜாக்குலினுடன் நடிப்பதோடு சரி வேறு எங்காவது சேர்த்து பார்த்தேன் அவ்வளவு தான் என்று நடிகை ஆலியா பட் தனது காதலரும், நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவை எச்சரித்துள்ளாராம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இடையில் கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் மீண்டும் சேர்ந்துவிட்டனர்.
இந்நிலையில் ஆலியா சித்தார்த்தை எச்சரித்துள்ளார்.

சித்தார்த்
சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். இது பாங் பாங் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

ஜாக்குலின்
சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம். செட்டில் இருவரும் ஒரே கடலையாம். மேலும் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஜோடியாக ஊர் சுற்றுகிறார்களாம்.

ஆலியா
சித்தார்த், ஜாக்குலினுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது குறித்து அறிந்த ஆலியா இனி, அவ கூட சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளார். இதையடுத்து சித்தார்த்த ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளார்.

அக்ஷய் குமார்
ஜாக்குலினால் ஒரு ஜோடிக்கு இடையே பிரச்சனை வருவது இது முதல் முறை அல்ல. முன்னதாக ஜாக்குலினுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று அக்ஷய் குமாருக்கு அவரது மனைவி ட்விங்கிள் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











