twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லா மிருகமும் என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சுடுச்சு.. கமலிடம் காரணங்களை அடுக்கிய சுரேஷ் தாத்தா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி கமலிடம் ஹவுஸ்மேட்ஸ் குறித்து பல்வேறு காரணங்களை கூறினார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா மற்றும் வேல் முருகன் ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்.

    சுரேஷ் சக்கரவர்த்திதான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்ற தகவல் சனிக்கிழமையை வெளியானது. இதனைக் கேட்டே ரசிகர்கள் கடுப்பாகினர்.

    உங்களுக்கு கேஸ் இருந்தா சொல்லுங்க சார்.. நான் வாதாடி தருகிறேன்.. கமலுக்கு ஆஜராக ஆசைப்பட்ட ரம்யா!உங்களுக்கு கேஸ் இருந்தா சொல்லுங்க சார்.. நான் வாதாடி தருகிறேன்.. கமலுக்கு ஆஜராக ஆசைப்பட்ட ரம்யா!

    காத்திருந்த ரசிகர்கள்

    காத்திருந்த ரசிகர்கள்

    இருந்த போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

    ஏன் பேக்கடித்து விட்டீர்கள்?

    ஏன் பேக்கடித்து விட்டீர்கள்?

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். தொடர்ந்து பிக்பாஸ் மேடையில் கமலை சந்தித்தார் சுரேஷ். அப்போது, இரண்டு வாரங்களாய், ஏன் பேக்கடித்து விட்டீர்கள் என்று கேட்டார் கமல்.

    என்ஜாய் செய்தேன்

    என்ஜாய் செய்தேன்

    அதற்கு பதில் சொன்ன சுரேஷ் சக்கரவர்த்தி, நான் நல்லா விளையாடுனேன். நல்லாவே என்ஜாய் பண்ணினேன். கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை காட்டிலும் நான் முழுமையாக என்ஜாய் செய்தேன் என்றார்.

    மிருகங்கள் அட்டாக்

    மிருகங்கள் அட்டாக்

    மேலும் முன்பு கோமாளி குரங்கு போல் ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது எல்லா மிருகங்களும் என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சடுச்சு. அதனால்தான் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு மேலே ஏறி உட்காந்து கொண்டேன்.

    சாப்பிடாமல் இருந்தது ஏன்?

    சாப்பிடாமல் இருந்தது ஏன்?

    அதன் பிறகு அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் நான் வேடிக்கை பார்த்தேன் என்றார் சுரேஷ். தொடர்ந்து பேசிய கமல் ஒருவர் சமையலை மட்டும் சாப்பிடாமல் இருந்தது குறித்து கேட்டார். அதற்கு சாதாரண ஆட்களுக்கே ரூல் தெரியும் போது கேப்டனுக்கு தெரியாதா சார் அதனால் தான் என்றார்.

    அர்ச்சனாவும் சுச்சியும்..

    அர்ச்சனாவும் சுச்சியும்..

    சுச்சி வந்த பிறகு பிக்பாஸ் வீட்டிர் குரூப்பிஸம் அதிகமாகிவிட்டது. அர்ச்சனாவும் சுச்சியும் அவர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என ஒவ்வொரு குறித்தும் நடந்த விஷயங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார்.

    English summary
    All animals start to attack me in the Biggboss house said Suresh Chakravarthy to Kamal. Suresh Chakravarthy evicted from Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X