Don't Miss!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எல்லா மிருகமும் என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சுடுச்சு.. கமலிடம் காரணங்களை அடுக்கிய சுரேஷ் தாத்தா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி கமலிடம் ஹவுஸ்மேட்ஸ் குறித்து பல்வேறு காரணங்களை கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா மற்றும் வேல் முருகன் ஆகியோர் வெளியேறிய நிலையில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்.
சுரேஷ் சக்கரவர்த்திதான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்ற தகவல் சனிக்கிழமையை வெளியானது. இதனைக் கேட்டே ரசிகர்கள் கடுப்பாகினர்.
உங்களுக்கு கேஸ் இருந்தா சொல்லுங்க சார்.. நான் வாதாடி தருகிறேன்.. கமலுக்கு ஆஜராக ஆசைப்பட்ட ரம்யா!
காத்திருந்த ரசிகர்கள்
இருந்த போதும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.
ஏன் பேக்கடித்து விட்டீர்கள்?
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷுக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர் ஹவுஸ்மேட்ஸ். தொடர்ந்து பிக்பாஸ் மேடையில் கமலை சந்தித்தார் சுரேஷ். அப்போது, இரண்டு வாரங்களாய், ஏன் பேக்கடித்து விட்டீர்கள் என்று கேட்டார் கமல்.
என்ஜாய் செய்தேன்
அதற்கு பதில் சொன்ன சுரேஷ் சக்கரவர்த்தி, நான் நல்லா விளையாடுனேன். நல்லாவே என்ஜாய் பண்ணினேன். கடந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை காட்டிலும் நான் முழுமையாக என்ஜாய் செய்தேன் என்றார்.
மிருகங்கள் அட்டாக்
மேலும் முன்பு கோமாளி குரங்கு போல் ஆடிக் கொண்டிருந்தேன். அப்போது எல்லா மிருகங்களும் என்னை அட்டாக் பண்ண ஆரம்பிச்சடுச்சு. அதனால்தான் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு மேலே ஏறி உட்காந்து கொண்டேன்.
சாப்பிடாமல் இருந்தது ஏன்?
அதன் பிறகு அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ள தொடங்கிவிட்டார்கள் நான் வேடிக்கை பார்த்தேன் என்றார் சுரேஷ். தொடர்ந்து பேசிய கமல் ஒருவர் சமையலை மட்டும் சாப்பிடாமல் இருந்தது குறித்து கேட்டார். அதற்கு சாதாரண ஆட்களுக்கே ரூல் தெரியும் போது கேப்டனுக்கு தெரியாதா சார் அதனால் தான் என்றார்.
அர்ச்சனாவும் சுச்சியும்..
சுச்சி வந்த பிறகு பிக்பாஸ் வீட்டிர் குரூப்பிஸம் அதிகமாகிவிட்டது. அர்ச்சனாவும் சுச்சியும் அவர்கள் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என ஒவ்வொரு குறித்தும் நடந்த விஷயங்கள் குறித்தும் விளக்கமாக பேசினார்.