Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா?: ராஜேஷ் விளக்கம்
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் நாயகிகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கம் இடையே சண்டை என வெளியான தகவல்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து ஹீரோவாக நடித்து வரும் படம் கடவுள் இருக்கான் குமாரு. படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி என இரண்டு நாயகிகள்.
பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சண்டை
கடவுள் இருக்கான் குமாரு ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகைகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.
ராஜேஷ்
ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் பிரச்சனை வரும் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆனந்தி, நிக்கி கல்ராணியிடம் முதலிலேயே விளக்கமாக கூறிவிட்டேன் என்கிறார் ராஜேஷ்.
இல்லை
அவரவர் கதாபாத்திரம் பற்றி நன்றாக புரிந்து கொண்டதால் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு இடையே மோதல் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கதை
கடவுள் இருக்கான் குமாரு ஒரு கலகலப்பான படம். ஆனந்தி, நிக்கி இருவருமே ஜி.வி. பிரகாஷை காதலிக்கிறார்கள். இதில் யார் ஜி.வி.யுடன் சேர்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று ராஜேஷ் கூறியுள்ளார்.