Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கடவுள் இருக்கான் குமாரால் ஆனந்திக்கும், நிக்கிக்கும் சண்டையா?: ராஜேஷ் விளக்கம்
சென்னை: கடவுள் இருக்கான் குமாரு படப்பிடிப்பில் நாயகிகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கம் இடையே சண்டை என வெளியான தகவல்கள் குறித்து இயக்குனர் ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து ஹீரோவாக நடித்து வரும் படம் கடவுள் இருக்கான் குமாரு. படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி என இரண்டு நாயகிகள்.
பிரகாஷ் ராஜ், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சண்டை
கடவுள் இருக்கான் குமாரு ஷூட்டிங்ஸ்பாட்டில் நடிகைகள் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே சண்டை என்று செய்திகள் வெளியாகின.
ராஜேஷ்
ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் பிரச்சனை வரும் என்பார்கள். ஆனால் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் பற்றி ஆனந்தி, நிக்கி கல்ராணியிடம் முதலிலேயே விளக்கமாக கூறிவிட்டேன் என்கிறார் ராஜேஷ்.
இல்லை
அவரவர் கதாபாத்திரம் பற்றி நன்றாக புரிந்து கொண்டதால் ஆனந்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு இடையே மோதல் என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கதை
கடவுள் இருக்கான் குமாரு ஒரு கலகலப்பான படம். ஆனந்தி, நிக்கி இருவருமே ஜி.வி. பிரகாஷை காதலிக்கிறார்கள். இதில் யார் ஜி.வி.யுடன் சேர்கிறார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று ராஜேஷ் கூறியுள்ளார்.