அந்த நடிகை கூட ஏன்டா ஊர் சுத்துற: காதலருடன் மல்லுக்கு பாய்ந்த நடிகை
மும்பை: நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸால் ஆலியா பட்டுக்கும் அவரது காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் இடையே பிரச்சனையாம்.
பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார். இடையில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தீர்ந்தது. இந்நிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
காதல் ஜோடிக்கு பிரச்சனை ஏற்பட நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் காரணமாம்.

சித்தார்த்
ரீலோட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுவிட்டதாம்.

ஜாக்குலின்
ரீலோட் படப்பிடிப்பு முடிந்த பிறகும் ஜாக்குலினும், சித்தார்த்தும் ஜோடி போட்டு ஊர் சுற்றுகிறார்களாம். அவ்வப்போது காபி, சாப்பாடுக்காக ஹோட்டலுக்கு செல்கிறார்களாம்.

ஆலியா
ஜாக்குலினோட உனக்கு என்ன ஊர் சுற்ற வேண்டி இருக்கு என்று கூறி ஆலியா தனது காதலர் சித்தார்த்திடம் மல்லுக்கு பாய்ந்துள்ளார். இது தொடர்பாக ஆலியா, சித்தார்த இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

ரத்து
ஆலியாவும், சித்தார்த்தும் சேர்ந்து வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுப்பதாக இருந்தது. இந்நிலையில் ஜாக்குலின் பஞ்சாயத்தால் வெளிநாட்டு பயணத்தை ஆலியா ரத்து செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











