யுவராஜ் சிங்கிற்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனையா?
Recommended Video

மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடிகை ஹேசல் கீச்சை இரண்டு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹேசல் நடிக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு ஹேசல் தனது பெயரை குர்பசந்த் கவுர் என்று மாற்றிக் கொண்டார்.
கொண்டாட்டம்
ஹேசல் கீச்சின் 31வது பிறந்தநாளை(பிப்ரவரி 28) கொண்டாட யுவராஜ் சிங் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார். பனிப்பொழியும் இடத்தில் புகைப்படம் எடுத்து அதை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மனைவியை வாழ்த்தினார்.

ஹேசல்
யுவராஜ் சிங்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாதங்களாகவே பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது.

மனைவி
யுவராஜ் வீட்டில் பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளது ஹேசலை கவலை அடைய வைத்துள்ளதாம். இதையடுத்து அவர் யுவி குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

போட்டோ
மாமியார் ஷப்னம், யுவியின் சகோதரர் ஜொராவருடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹேசல். ஆனால் அவர் திடீர் என்று புகைப்படங்கள் வெளியிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











