Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
யுவராஜ் சிங்கிற்கும், மனைவிக்கும் இடையே பிரச்சனையா?
Recommended Video
மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும் அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடிகை ஹேசல் கீச்சை இரண்டு ஆண்டுகளாக காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஹேசல் நடிக்கவில்லை.
திருமணத்திற்கு பிறகு ஹேசல் தனது பெயரை குர்பசந்த் கவுர் என்று மாற்றிக் கொண்டார்.
கொண்டாட்டம்
ஹேசல் கீச்சின் 31வது பிறந்தநாளை(பிப்ரவரி 28) கொண்டாட யுவராஜ் சிங் அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றார். பனிப்பொழியும் இடத்தில் புகைப்படம் எடுத்து அதை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மனைவியை வாழ்த்தினார்.
ஹேசல்
யுவராஜ் சிங்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. சில மாதங்களாகவே பிரச்சனையாக இருப்பதாக கூறப்படுகிறது.
மனைவி
யுவராஜ் வீட்டில் பிரச்சனை என்று செய்திகள் வெளியாகியுள்ளது ஹேசலை கவலை அடைய வைத்துள்ளதாம். இதையடுத்து அவர் யுவி குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
போட்டோ
மாமியார் ஷப்னம், யுவியின் சகோதரர் ஜொராவருடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் ஹேசல். ஆனால் அவர் திடீர் என்று புகைப்படங்கள் வெளியிடுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.