Don't Miss!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என் பையனோட படத்தை ரிலீஸ் பண்ணாதீங்க... அடம்பிடிக்கும் அல்லு அர்ஜூன் தந்தை
மும்பை : நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
இந்தப் படத்திற்கு அனைத்து மொழிகளிலும் கிடைத்த வரவேற்பையடுத்து தற்போது அவரது முந்தைய வெற்றிப்படமான அலா வைகுந்தபுரமுலு படம் வரும் 26ம் தேதி இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று அல்லு அர்ஜூனின் தந்தை தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதுக்கு கன்டிஷன் போட்டு தான் நடித்தேன்...ஓப்பனாக பேட்டியளித்த ஜெய்பீம் நடிகர்
புஷ்பா படம்
அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் கடந்த மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியானது.
300 கோடி ரூபாய் வசூல்
தற்போது ஒரு மாதத்தை கடந்து இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிவருகிறது. 300 கோடி ரூபாய் வசூலை தாண்டி இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தியில் இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து அல்லு அர்ஜூனின் முந்தைய படமான அலா வைகுந்தபுரமுலு படத்தை தற்போது இந்தியில் மொழி மாற்றம் செய்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அலா வைகுந்தபுரமுலு ரிலீஸ்
வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று இந்தப் படம் இந்தியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாக அலா வைகுந்தபுரமுலு படம் பாலிவுட்டில் ஷெசாதா என்ற பெயரில் பாலிவுட் நாயகன் கார்த்திக் ஆர்யன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்து வருகிறார்.
அலா வைகுந்தபுரமுலு ரீமேக்
பூஷன் குமார் மற்றும் அமான் கில் என்பவர்களுடன் இணைந்து அவர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அலா வைகுந்தபுரமுலு படத்தின் டப்பிங் பட ரிலீஸ் இந்தப் படத்தின் ரிலீசை பாதிக்கும் என்று கருதி அவர் இந்த டப்பிங் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மகனின் படத்தை தடுக்கும் தந்தை
இதுகுறித்த பேச்சுவார்த்தை இன்றைய தினம் நடைபெறவுள்ளநிலையில், இதுகுறித்த இறுதி முடிவை படத்தின் தயாரிப்பாளர் இன்றைய தினம் எடுப்பார் என்று தெரிகிறது. இவ்வாறு தன்னுடைய மகனின் படத்தின் ரிலீசை தந்தையே தடுக்கும் நிலை காணப்படுகிறது.
26ம் தேதி ரிலீசாகுமா?
இதனிடையே, இந்த விவகாரத்தில் அனைவருக்கும் சிறப்பான வகையில் முடிவு எடுக்கப்படும் என்று அலா வைகுந்தபுரமுலு படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாகுமா என்பது குறித்து இன்றைய தினம் தெரியவரும்.
ரிலீஸ் செய்யாமலிருக்க ரூ 8 கோடி?
இந்நிலையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருக்க ஷெசாதா படக்குழுவினர், அலா வைகுந்தபுரமுலு தயாரிப்புத் தரப்பிற்கு 8 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துள்ளது.