Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன்…இயக்குனர் யார் தெரியுமா?
சென்னை : தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாக நீண்ட நாட்களாக நல்ல கதையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக பல மேடைகளில் கூறியுள்ளார்
அலா வைகுண்டபுரம்லோ மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்பொழுது சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.
புஷ்பா கிட்டத்தட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்க தமிழில் நேரடி திரைப்படத்தில் அறிமுகமாவதில் மிகத் தீவிரமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கௌதம் மேனன் சொன்னக் கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
200 கோடி
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ் மலையாளம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் எக்கச்சக்கமான தீவிர ரசிகர்களை கொண்டுள்ள அல்லு அர்ஜுன் படங்கள் ஒவ்வொரு முறையும் வெளியாகும் போது இங்கு இருக்கும் ரசிகர்களாலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான அலா வைகுண்டபுரம்லோ மாபெரும் வெற்றி பெற்றதோடு உலக அளவில் 200 கோடி மேல் வசூலித்து வசூல் வேட்டை நடத்தியது.
ஆர்யா வில்லனாக
நடிப்பு நடனம் ஆக்ஷன் என அனைத்திலும் பிச்சு உதறும் அல்லு அர்ஜுன் இப்பொழுது ரங்கஸ்தலம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆர்யா வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். செம்மர கடத்தல் பற்றிய படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
கௌதம் மேனன்
நீண்டகாலமாகவே தமிழில் நேரடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அல்லு அர்ஜுனின் பல ஆண்டுகால ஆசை என்பதால் இப்போது அதன் தீவிரமாக பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதில் கௌதம் மேனன் சொன்ன கதை பிடித்துப் போக இப்பொழுது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மும்முரமாக இருக்கிறாராம்
இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் கண்டிப்பாக தமிழில் ஒரு நேரடிப் படம் நடித்தே ஆக வேண்டுமென மும்முரமாக இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புஷ்பா படத்தைத் தொடர்ந்து அடுத்தது கொரட்டால சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.