Don't Miss!
- News தமிழகத்தில் குறைந்த வாக்குப்பதிவு.. "அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும்.." என்ன காரணம் தெரியுமா
- Sports DC vs SRH : 22 சிக்ஸ், 18 ஃபோர்ஸ்.. ஈஏ கிரிக்கெட் விளையாடிய ட்ராவிஸ் ஹெட்.. நொந்துபோன டெல்லி அணி!
- Technology குறிவைத்து தாக்கும் BrahMos ஏவுகணை.. இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் வாங்கிய ஆயுதம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance ரூ.4,000 கோடிக்கு ஐபிஓ.. ரெடியான ஓலா நிறுவனம்..!
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
தமிழில் அறிமுகமாகும் அல்லு அர்ஜுன்…இயக்குனர் யார் தெரியுமா?
சென்னை : தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாக நீண்ட நாட்களாக நல்ல கதையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக பல மேடைகளில் கூறியுள்ளார்
அலா வைகுண்டபுரம்லோ மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்பொழுது சுகுமாரன் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.
புஷ்பா கிட்டத்தட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்க தமிழில் நேரடி திரைப்படத்தில் அறிமுகமாவதில் மிகத் தீவிரமாக இருக்கும் அல்லு அர்ஜுன் கௌதம் மேனன் சொன்னக் கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
200 கோடி
தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழ் மலையாளம் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் எக்கச்சக்கமான தீவிர ரசிகர்களை கொண்டுள்ள அல்லு அர்ஜுன் படங்கள் ஒவ்வொரு முறையும் வெளியாகும் போது இங்கு இருக்கும் ரசிகர்களாலும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான அலா வைகுண்டபுரம்லோ மாபெரும் வெற்றி பெற்றதோடு உலக அளவில் 200 கோடி மேல் வசூலித்து வசூல் வேட்டை நடத்தியது.
ஆர்யா வில்லனாக
நடிப்பு நடனம் ஆக்ஷன் என அனைத்திலும் பிச்சு உதறும் அல்லு அர்ஜுன் இப்பொழுது ரங்கஸ்தலம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் இதில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆர்யா வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். செம்மர கடத்தல் பற்றிய படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
கௌதம் மேனன்
நீண்டகாலமாகவே தமிழில் நேரடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது அல்லு அர்ஜுனின் பல ஆண்டுகால ஆசை என்பதால் இப்போது அதன் தீவிரமாக பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். அதில் கௌதம் மேனன் சொன்ன கதை பிடித்துப் போக இப்பொழுது பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மும்முரமாக இருக்கிறாராம்
இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருடத்திற்குள் கண்டிப்பாக தமிழில் ஒரு நேரடிப் படம் நடித்தே ஆக வேண்டுமென மும்முரமாக இருக்கிறாராம் அல்லு அர்ஜுன். இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புஷ்பா படத்தைத் தொடர்ந்து அடுத்தது கொரட்டால சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.