Don't Miss!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் சூப்பரா இருக்கேன்... எனக்காக பிரார்த்தனை செஞ்சதுக்கு நன்றி... தலைவணங்கிய ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார்
கோதாவரி : கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அவர் தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மாறன் அண்ணா நம்பவே முடியல இதயம் ரொம்ப கனமா இருக்கு.. மாறன் மறைவுக்கு காளி வெங்கட் இரங்கல்!
தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
ரசிகர்களிடம் சிறப்பான இடம்
கடந்த 2003ல் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பான படங்களை அளித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தவர் டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜூன். இவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறி வருகிறது.
வீட்டில் தனிமைப்படுத்திய அர்ஜூன்
தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அல்லு அர்ஜூன். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னுடைய வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தார். பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்திய அவர், தன்னுடைய உடல்நலம் குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மகிழ்ச்சியான செய்தி
இந்நிலையில் 15 நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகு தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறைப் படத்தப்பட்டுள்ள லாக்டவுன் கொரோனா பரவலை குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.