Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நான் சூப்பரா இருக்கேன்... எனக்காக பிரார்த்தனை செஞ்சதுக்கு நன்றி... தலைவணங்கிய ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார்
கோதாவரி : கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜூன் தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் அவர் தன்னுடைய வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
மாறன் அண்ணா நம்பவே முடியல இதயம் ரொம்ப கனமா இருக்கு.. மாறன் மறைவுக்கு காளி வெங்கட் இரங்கல்!
தற்போது சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
ரசிகர்களிடம் சிறப்பான இடம்
கடந்த 2003ல் தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பான படங்களை அளித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்தவர் டோலிவுட் ஸ்டைலிஷ் சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜூன். இவரது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக மாறி வருகிறது.
வீட்டில் தனிமைப்படுத்திய அர்ஜூன்
தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்திலும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் அல்லு அர்ஜூன். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி தன்னுடைய வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியிருந்தார். பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்திய அவர், தன்னுடைய உடல்நலம் குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
மகிழ்ச்சியான செய்தி
இந்நிலையில் 15 நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகு தற்போது தனக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறைப் படத்தப்பட்டுள்ள லாக்டவுன் கொரோனா பரவலை குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.