Don't Miss!
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி... குடும்பத்திற்கு ஆறுதல்... ரசிகர்களை கவர்ந்த புஷ்பா நாயகன்
பெங்களூரு : நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
ஆனால் அவரது செயல் தற்போது ரசிகர்களின் மனதை வெற்றிக் கண்டுள்ளது.
சமீபத்தில் மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு அல்லு அர்ஜுன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஓ...இது தான் அர்த்தமா...மாநாடு டைட்டிலுக்கு புது அர்த்தம் சொன்ன டி.ராஜேந்தர்
நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த டிசம்பரில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் தன்னுடைய லுக்கையும் ஸ்டைலையும் மாற்றி சிறப்பான நடிப்பை அளித்திருந்தார் அல்லு அர்ஜுன். இந்தப் படம் ரசிகர்களின் மனதை வெற்றி கொண்டுள்ளது.
சூப்பர் டூப்பர் வெற்றி
படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளது. கோடிக்கணக்கில் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்தியில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. தொடர்ந்து வசூல்மழையை பொழிந்து வருகிறது. இதன்மூலம் இந்திய அளவில் அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
இரண்டாவது பாகம்
தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகமும் எடுக்கப்பட உள்ள நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பகத் பாசிலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இதயங்களை கவர்ந்த அல்லு அர்ஜுன்
இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள அல்லு அர்ஜுன் தற்போது அவர்களது இதயங்களையும் தொட்டுள்ளார். கடந்த அக்டோபரில் மாரடைப்பால் மறைந்த புனித் ராஜ்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
நேரில் அஞ்சலி
மேலும் புனீத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தனது மரியாதையையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புனீத்தின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரிலும் பதிவு
மேலும் புனீத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களுக்கு தனது மரியாதையையும் செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புனீத்தின் மறைவையொட்டி தென்னிந்திய நடிகர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுத தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.