Don't Miss!
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
பட வாய்ப்புக்கு படுக்கை: புது குண்டை தூக்கிப் போட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் பற்றி புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நடிகை அபூர்வா, சமூக ஆர்வலர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இயக்குனர்களுமே படுக்கைக்கு வருமாறு நடிகைகளை அழைத்துள்ளனர். தங்களின் மானம் மற்றும் கெரியர் போய்விடும் என்பதால் பயந்து கொண்டு பல நடிகைகள் அதை வெளியே சொல்வது இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாகுபாடு
சினிமா துறையில் சம்பளம் கொடுப்பதிலும் கூட பாகுபாடு உள்ளது. ஒரு நடிகருக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுத்தால் நடிகைக்கு ரூ. 1 கோடி அல்லது அதற்கும் குறைவாகவே தருகிறார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
நடிகைகள்
பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். ஏதாவது ஏடாகூட விஷயம் நடந்தால் நடிகர்கள் அமைதியாக இருக்கும் நிலை மாற வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுஜாதா கூறியுள்ளார்.
தைரியம்
அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் தெரிவித்தால் அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கிறார்கள். உடனே அந்த நடிகையை அனைவரும் குறி வைக்கிறார்கள். அவர் பிரச்சனை பார்ட்டி, திமிர் பிடித்தவர் என்று கூறி ஒதுக்கிவிடுகிறார்கள் என்கிறார் நடிகை அபூர்வா.
பூனம்
ஸ்ரீ ரெட்டி துணிச்சலாக போராடி வரும் நிலையில் நடிகை பூனம் கவுர் ஒரு தெலுங்கு பட இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். என்ன அவர் ஸ்ரீ ரெட்டி போன்று தைரியமாக பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.