Don't Miss!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- News ஸ்டாலின் கேட்ட கேள்வி! மேஜையில் இருந்த உளவுத்துறை ரிப்போர்ட! 40ல் வெற்றி உறுதி.. ஆனா.. ஒரு சிக்கலாமே
- Lifestyle தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பட வாய்ப்புக்கு படுக்கை: புது குண்டை தூக்கிப் போட்ட நடிகை ஸ்ரீ ரெட்டி
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலக இயக்குனர்கள் பற்றி புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் நேற்று ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நடிகை அபூர்வா, சமூக ஆர்வலர் சுஜாதா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து இயக்குனர்களுமே படுக்கைக்கு வருமாறு நடிகைகளை அழைத்துள்ளனர். தங்களின் மானம் மற்றும் கெரியர் போய்விடும் என்பதால் பயந்து கொண்டு பல நடிகைகள் அதை வெளியே சொல்வது இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
பாகுபாடு
சினிமா துறையில் சம்பளம் கொடுப்பதிலும் கூட பாகுபாடு உள்ளது. ஒரு நடிகருக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுத்தால் நடிகைக்கு ரூ. 1 கோடி அல்லது அதற்கும் குறைவாகவே தருகிறார்கள் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
நடிகைகள்
பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும் நடக்கிறது என்று மக்கள் கூறுகிறார்கள். ஏதாவது ஏடாகூட விஷயம் நடந்தால் நடிகர்கள் அமைதியாக இருக்கும் நிலை மாற வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுஜாதா கூறியுள்ளார்.
தைரியம்
அதிகாரம் படைத்தவர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு பெண் தெரிவித்தால் அது பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்கிறார்கள். உடனே அந்த நடிகையை அனைவரும் குறி வைக்கிறார்கள். அவர் பிரச்சனை பார்ட்டி, திமிர் பிடித்தவர் என்று கூறி ஒதுக்கிவிடுகிறார்கள் என்கிறார் நடிகை அபூர்வா.
பூனம்
ஸ்ரீ ரெட்டி துணிச்சலாக போராடி வரும் நிலையில் நடிகை பூனம் கவுர் ஒரு தெலுங்கு பட இயக்குனர் மீது புகார் தெரிவித்துள்ளார். என்ன அவர் ஸ்ரீ ரெட்டி போன்று தைரியமாக பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.