Just In
- 14 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 47 min ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
- 1 hr ago
குருவாயூரில் சாமி தரிசனம் செய்த சோம்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன்முறையாக வெளியிட்ட வீடியோ!
Don't Miss!
- Sports
அதே தப்பு.. இவ்ளோ காசை வேஸ்ட் பண்ணிட்டீங்களே.. சிக்கலில் சிஎஸ்கே.. கடுப்பில் ரசிகர்கள்!
- News
சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனது பெயரைச் சொல்லி நடிகைகளிடம் ஏமாற்றும் மோசடி கும்பல்.. பிரபல இயக்குனர் பரபரப்பு புகார்!
சென்னை: தனது பெயரைப் பயன்படுத்தி, நடிகைகளிடம் மோசடியில் ஈடுபடுவதாக, பிரபல இயக்குனர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
நிவின் பாலி, நஸ்ரியா நடித்த, நேரம் என்ற படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.
இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி, சிறப்பான வெற்றி பெற்றது.

அனைவரும் முன்னணி
அடுத்ததாக, பிரேமம் என்ற படத்தை மலையாளத்தில் இயக்கினார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் நடித்த அனைவரும் இப்போது முன்னணி நடிகையாக இருக்கின்றனர்.

படத்தின் பெயர் பாட்டு
இதையடுத்து அவர் அடுத்த படத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகள் கழித்து தனது அடுத்த படத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார், அல்போன்ஸ் புத்திரன். இதில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், 'எனது அடுத்தப் படத்தின் பெயர் 'பாட்டு'. யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிக்கிறது.

பெயரைச் சொல்லி
இந்த படம் மூலம் நான் இசை அமைப்பாளராக மாறி இருக்கிறேன். மற்ற விவரங்களை பிறகு தெரிவிக்கிறேன் ' என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனது பெயரைச் சொல்லி துணை நடிகைகளிடமும் பெண்களிடமும் மர்ம நபர்கள் பேசி வருவதாகக் கூறியுள்ளார்.

என்னிடமே புத்திரன்
அந்த போன் நம்பரையும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: '9746066514', ‘9766876651 என்ற எண்களில் இருந்து என் பெயரை சொல்லி சிலர் பேசுகிறார்கள். நான் இந்த எண்களில் அழைத்தால், என்னிடமே அல்போன்ஸ் புத்திரன் பேசுகிறேன் என்று சொல்கிறார்கள்.

மோசடி வேலை
அதனால் இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் யாரும் ஏமாந்து விடவேண்டாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வீடியோ, புகைப்படங்கள் எதையும் அனுப்ப வேண்டாம். இது ஒரு மோசடி வேலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.

நாட்களுக்கு முன்
இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் வினீத், சில நாட்களுக்கு முன் தனது பெயரை சொல்லி, சிலர் மோசடியில் ஈடுபடுவதாகக் கூறியிருந்தார். அது பற்றி போலீசில் புகார் செய்திருந்தார். இந்நிலையில், அல்போன்ஸ் புத்திரனும் கூறியிருப்பது கேரள சினிமாதுறையினரிடம் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.