Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு வைத்த சிஎஸ்கே வீரர்.. டி20 உலககோப்பையில் சேர்க்க ரெய்னா கோரிக்கை
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமலாபால் கொடுத்தது போலி முகவரிதான் - மோட்டார் வாகனத்துறை அறிக்கை
Recommended Video
புதுச்சேரி : நடிகை அமலாபால் மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் புதுச்சேரியில் வசிப்பதாகப் பொய்யான முகவரியைக் கொடுத்து கார் பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான், அமலாபால் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்திருந்தார். கேரள அரசு அமலாபால் வரி ஏய்ப்பு செய்ததை நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி சென்று விசாரித்த மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் அந்த விலாசம் போலியானவை என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீஸுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் டி.ஜி.பி லோக்நாத் பெஹ்ரா. இனிமேல் அமலா பால் கார் பதிவு வழக்கை க்ரைம் பிராஞ்ச் போலீசார் விசாரிப்பார்கள்.
இந்த விவகாரத்தில் அமலாபால் தான் எந்த வரி ஏய்ப்பும் செய்யவில்லை அதனால் கேரளாவில் வரி கட்டமாட்டேன் எனக் கூறியிருந்தார். ஃபகத் பாசில் கேரளாவில் வரி கட்ட ஒப்புக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.