நயன்தாரா வழியில் நானும்! - அமலா பால்
நயன்தாரா போல நானும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் கதைகளில் நடிக்கிறேன் என்கிறார் அமலா பால்.
அறம் படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவின் போக்கு மாற ஆரம்பித்துள்ளது. எல்லோரும் பெண்களை மையப்படுத்திய கதைகள் அல்லது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் கதைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

த்ரிஷாவும் இப்படிப்பட்ட கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது இவர்கள் வழியில் அமலா பாலும் திரும்பியுள்ளார்.
அதோ அந்த பறவை படத்தில் அவருக்குத்தான் முக்கிய வேடம். மேலும் இரு கதைகள் அமலா பாலுக்கென்றே உருவாக்கப்பட்டு வருகின்றனவாம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பெண்களை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் வெற்றி பெறுவது நல்ல விஷயம். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' எல்லோருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. நானும் இதுபோன்று சமூக பிரச்சினையை மையமாகkd கொண்ட 'அதோ அந்த பறவை' என்ற படத்தில் நடிக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











