Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
Aadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்!
Recommended Video
சென்னை: நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்திருக்கவே தேவையில்லை என்று ரொம்ப சிம்பிளா நாம் சொல்லிவிட்டு போய்விடலாம். ஆனால், இத்தனை அருமையான நல்ல கதையை வைத்துக்கொண்டு நடிகைக்குத் தவிக்கும் இயக்குநருக்கு ஒரு நடிகை வேண்டாமா?
அவர்தான் அமலா ...பால் ஒரு நடிகையாக கைக்கொடுத்து நடித்து ஆடையின்றி, அதே சமயம் ஆபாசம் இன்றி நடித்து இருக்கும் அமலாபாலை நடிகை என்கிற ரீதியில் எவ்வளவு பாராட்டினாலும் தகும். சுதந்திரம், தைரியம் என்று பேசும் பெண்கள் கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் விமர்சனங்கள் வருகின்றன.
உங்கள் வீட்டில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுடன் குடுமபமாக உட்கார்ந்து இந்த படத்தை பார்க்கலாம் என்பதும் பலரின் கருத்தாக இருக்கிறது.
ஆண்களே தொட்டதில்லைன்னு சொன்னியேமா மீரா.. இது என்ன? பார்க்கும் போதே கிக்கு ஏறுதே!
நிகர் என்று
ஆணுக்குப் பெண் நிகர் இங்கே என்று கும்மியடி பாப்பா என்று பாரதியார் சொன்னது போல, பெண் சுதந்திரம் என்பது இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றிய கதைதான் இந்த ஆடை படம். தன் பெண்ணுக்கு தேவையான அளவு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்கிறார் அம்மா. ஆணுக்கு எல்லா விதத்திலும் சமமான பெண்ணாக வளர்ந்து இருக்கும் அமலா பால் எல்லா விதத்திலும் பெண்ணுக்கு தேவையான சுதந்திரத்தோடு வலம் வந்திருக்கும் கதைதான் ஆடை படம்.
சர்ச்சையான கதை
கம்பி மேல நடப்பது போன்ற ஒரு கிரிட்டிக்கலான கதையை மிக தைரியமாக கையாண்டு எந்த விதத்திலும் ஆபாசம் துளியும் தலை காட்டாதபடி காமிரா கோணத்தில் கதையை கொண்டு போயிருக்கும் இயக்குநர் ரத்னகுமார்,பாவம் இந்த படத்தில்நடிக்க வைக்க எத்தனை நடிகைகளை அணுகி அவர்கள் நோ சொன்னார்களோ... ஆனால்,அமலா பாலுக்கு அடித்தது யோகம்.
விஜய் கார்த்திக்
சினிமாட்டோகிராபர் விஜய் கார்த்திக் மிக கவனமாக காமிராவைக் கையாண்ட விதம், வியக்கும்படி இருந்ததாக பேசுகிறார்கள். ஒரு பெரிய பில்டிங்கில் அமலாபால் மாட்டிக் கொள்கிறார். அந்த பில்டிங்கில் அமலாபால் ஆடையின்றி, அங்கும் இங்கும் அடைக்கலம் புகுந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டும். நிச்சயம் இதில் அமலாபால் ஆடை இன்றிதான் நடித்திருக்க வேண்டும் என்று எல்லாருமே வாதிட்டாலும், எந்த இடத்தில் நீங்கள் அவர் உடம்பை பார்த்தீர்கள் என்று விவாதமே வைக்கலாம்.
,இடது புறம்
வலது புறம்,இடது புறம் என்று அமலாவின் உடல் தெரிந்தாலும், முக்கியமாக ஆடையின்றி அமலாவின் உடலை இந்த இடத்தில் பார்த்தேன் என்று எவராலும் சொல்வ முடியாதபடி சினிமாட்டோ கிராபர் காமிராவை கையாள ரொம்பவே சிரமப்பட்டு இருக்கிறார் என்று புகழாரம் சூட்டுகிறார்கள். மிக முக்கியமாக ஒரு காட்சியில் முகம் காட்டும் கண்ணாடி உடைந்துவிட, உடைந்த அத்தனை பாக கண்ணாடி சில்லுகளில் நமது உடலின் எதோ ஒரு பாகம் அந்த கண்ணாடிகளை கடந்து செல்லும்போது தெரியும். அந்த இடத்திலும் மிக கவனமாக காமிராவைக் கையாண்டு இருக்கிறார் என்று விஜய் கார்த்திக்கை புகழ்கிறார்கள்.
கதை பிறந்த விதம்
திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒரு காலத்தில் பெண்கள் மேலாடை அணிவதற்கு வரி விதிக்கப்பட்டு இருந்ததாம். அந்த வரியை நீக்கி தங்களது உரிமையைப் பெற ஒரு பெண் உண்மையாகவே தனது மார்பகத்தை அறுத்தெறிந்து பெண்களின் உரிமையை நிலை நாட்டினாராம். அதை அடிப்படையாக வைத்து இன்றைக்கும் பெண்கள் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பதை காண்பிக்கும் படம்தான் ஆடை.
மிக துணிச்சலுடன் இந்த படத்தில் பல விமர்சனங்களை எதிர்கொண்டு நடித்த அமலா பாலுக்கு ஒரு சல்யூட்!