பயந்துடன் வாழ்ந்தேன்...விவாகரத்து பற்றி மனம் திறந்த அமலா பால்
சென்னை : சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தொடர்ந்து மைனா, வேட்டை, தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டார். 2016 ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்த அமலாபால், தமிழில் கடைசியாக ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். நிர்வாணமாக நடித்த காரணத்தால் பல படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

கவர்ச்சி போட்டோக்களால் பரபரப்பு
இதனால் தமிழில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த அமலாபால், தெலுங்கில் சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, பரபரப்பை கிளப்பி வருகிறார்.

கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்
இதனால் சமூக வலைதளங்களில், பிட் பட நடிகை என்பது உள்ளிட்ட மிகக் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டு வருகிறது. இருந்தும் தொடர்ந்து கவர்ச்சியை கூட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

என்னை யாரும் ஆதரிக்கவில்லை
இந்நிலையில் ஏ.எல்.விஜய்யை விவகாரத்து செய்தது பற்றி பேட்டி ஒன்றில் கூறிய அமலா பால், நான் விவகாரத்து பெற்று பிரிய முடிவு செய்த போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அனைவரும் என்னை பயமுத்தவே முயற்சித்தனர்.

பயத்துடனேயே வாழ்ந்தேன்
வெற்றிகரமான நடிகையாக இருந்த போதிலும் அந்த சமயத்தில் பயத்துடனேயே வாழ்ந்தேன். எனது சந்தோஷம் மற்றும் மனநிலை பற்றி யாரும் கவலைப்படவில்லை என்றார். சமீபத்தில் ஜெகபதி பாபுவுடன் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில், மனைவியை மனரீதியாக துன்புறுத்தும் கணருக்குடன் வாழும் மனைவி வேடத்தில் அமலா பால் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











